அதிசயமான புண்ணியம் நம்மை படைத்த

அதிசயமான புண்ணியம் நம்மை படைத்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

104. இராகம்: உசேனி                                     ஆதிதாளம் (409)

 

பல்லவி

 

                   அதிசயமான புண்ணியம்!-நம்மை படைத்த

                   ஆண்டவர் பாடுபட்டு, மீண்டிரட்சித்த செயல்

                        அதிசயமான புண்ணியம்!

 

அனுபல்லவி

 

            சதி வினை அலகை சொல்லியபடி, விலக்கிய

            தருமிசை கனி நுகர் அதம் ஏவை பவம் அற,

            மதி மிகு தேவ குமாரன் இப்பூமியில்

            வந்ததும் ஜீவனைத் தந்தெமைப் புரந்ததும் - அதி

 

சரணங்கள்

 

1.         பாங்காகச் சீடர் தமது-பதம் விளக்கி

            பரிசுத்த நற்கருணை பக்ஷமாக அருளி,

            பல பல புத்தி சொன்னதும், பரிந்திரவில்

            பூங்காவனத்தில் சென்றதும்,-பொறுமையாக

            புண்ணியன் ஆத்துமத்தில் புகலரும் கஸ்திவாதை

            பூண்டு திகிலடைந்ததும், புவி அனைத்தும்

            தாங்கினன் அழுது கொண் டேங்கி, ப்ரலாபித்து,

            தரையில் மும்முறை முகம்பட விழுந்ததும், அவர்

            ஓங்கிய ஜெபங்களும் தபங்களும் அவஸ்தையில்

            உதிரப்ரவாக வேர்வைகள் பெருக்கானதும் - அதி

 

2.         தேவன் இக்கோலமாகவே-செருக்களத்தில்

            சென்று கொல்கதா என்னும் குன்றிற் கெழுந்ததின் பின்

            திருடர் இருவர் நடுவே, சிலுவைதனில்

            பாவிகள் தான் அறைந்ததும், பரிகாசங்கள்

            பண்ணவும் நிருவாணமாய் அண்ணல் தொங்கினதுவும்

            பாய்ந்த குருதி வெள்ளமும், பயங்கரமாய்

            ஆவி விட்டிறந்ததும், ஜீவனைக் கொடுத்ததும்

            அயல் விலாத் திறந்ததும்-அடக்கப்பட்டதும், அப்பால்

            மேவி அங்குயிர்த்ததும், எழுந்ததும் நடுவிட

            மீள்வதும், ஏசுநா யகர் அருள் செய்வதும் - அதி

 

- வே.சா

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு