துதி துதி என் மனமே

துதி துதி என் மனமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        துதி துதி என் மனமே

                                துதிகட்குள் வசிப்பவரை

                                எல்லா நாட்களும் செய்திடும்

                                நன்மைகளை நினைத்து

                                நன்றியுடன் பாடு மனமே

 

1.             அன்னையை போல அவர்

                என்னை அரவணைத்தாற்றிடுவார் (2)

                அவர் அன்புள்ள மார்பதனில்

                நான் இன்பமாக இளைப்பாறுவேன் (3)

 

2.             கஷ்டங்கள் வந்திடவே

                இஷ்ட கர்த்தராம் துணை அவரே

                துஷ்ட வைரிகள் நடுவிலவர்

                நல்ல பந்தி ஆயத்தம் செய்வார்

 

3.             பாரங்கள் அமிழ்ந்த்திடவே

                மாறா வியாதியால் கலங்கினாலும்

                அவர் காயத்தின் தழும்புகளால்

                வியாதிதனை விலக்கிடுவார்.

 

4.             சகாய பர்வதமே வல்ல

                கோட்டையும் அரணுமாம(2)

                எதும் பயமொன்றும் வேண்டாமென்றால்

                எந்த சேதமின்றி காக்கவல்லோன(3)

 

5.             சிங்கமோ விரியன் பாம்போ

                பால சிங்கமோ வல்லசர்ப்பமோ (2)

                அதன் தலையதை நசுக்கிடவே

                தக்க பெலன் தருபவரே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு