அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை

அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

22. (50T)     ஆனந்தமாக ஆர்ப்பரிப்பீரே

 

சங்கராபரணம்.                            98-ம் சங்கீதம்                  ஆதிதாளம்

 

பல்லவி

 

          அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை

          ஆனந்தமாக ஆர்ப்பரிப்பீரே.

 

அனுபல்லவி

 

            இரக்கம் கிருபை சத்தியம் விளங்க

            இஸ்ரவேலரை நினைவு கூர்ந்தார். - அதி

 

சரணங்கள்

 

1.         நீதியை ஜாதிகள் முன்பாக நிறுத்தி

            நித்திய ரட்சிப்பைப் பிரஸ்தாபப்படுத்திப்

            பூமியின் எல்லைகள் நின்புகழ் காணப்

            புரிந்தனை நின் அருள் பூரணமாக; - அதி

 

2.         பூரிகை எக்காளம் சுரமண்டலத்தால்

            பூரிப்பாய்த் துதிப்பீர் ஆண்டவர் நாமம்,

            கீத சத்தத்தாலே கீர்த்தனம்பண்ணிக்

            கிருபாகரனைப் போற்றிடுவீரே. - அதி

 

3.         ஆழியும் பூமியும் அதிலுள்ள யாவும்

            ஆறுகள் மலைகள் அனைத்துமே பாடும்.

            ஜாதிகள் யாவையும் சரிவர நடத்தி

            நீதியாய் நியாயம் விசாரிக்க வருவார். - அதி

 

4.         பரமபிதாவே பரிசுத்த தேவா,

            பாரினில் உதித்த தேவ குமாரா,

            ஆவியாய் எங்கும் நிறைந்து விளங்கும்

            ஆரண திரித்துவா, துதி உமக்கே. - அதி

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு