39.
இராகம்: சுகுபா ஆதிதாளம்
பல்லவி
அதி-மங்கல
காரணனே
துதி-தங்கிய
பூரணனே-நரர்
வாழ
விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
சரணங்கள்
1. மதி-மங்கின
எங்களுக்கும்
திதி[3]
- சிங்கினர்[4] தங்களுக்கும்
- உனின்
மாட்சியும்,[5]
திவ்விய காட்சியும் தோன்றிட
வையாய்
துங்கவனே! - அதி
2. முடி-மன்னர்கள்
மேடையையும்,
மிகு-உன்னத வீடதையும்-எண்ணா
மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,
வந்தனையோ தரையில்? - அதி
3. தீய-பேய்த்திரள்
ஓடுதற்கும்,
உம்பர்[6]-வாய்திரள்
பாடுதற்கும்,-உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்
பெற்ற நல் கோலம் இதோ? - அதி
- தேவவரம் முன்ஷி
No comments:
Post a Comment