07 July 2018

பாத்திரம் நிரம்பி வழிகின்றதே


பல்லவி

                   பாத்திரம் நிரம்பி வழிகின்றதே
                        பாடலும் நாவில் எழுகின்றதே
                        பாடுவேன் என்றும் இயேசுவையே
                        பாகமும் பங்கும் எனக்கவரே

சரணங்கள்

1.         பலத்தின் மேலே பலனடைந்தேன்
            பரத்தின் ஆவி வரமதனால்
            பள்ளம் மேடுகள் பலவரினும்
            பாடுகள் பட்டிட நான் தயங்கேன்

2.         அருளின் மேலே அருளடைந்தேன்
            ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால்
            அகலா முள் தான் இருந்திடினும்
            அருளேபோதும் என்றிடுவேன்

3.         மகிமை மேலே மகிமையுண்டே
            மாண்பு மேலும் மேலுமுண்டே
            மண்ணில் வாழும் வாழ்வதிலே
            மகிமை கண்டேன் முன் சுவையாய்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...