அதிசய
நாயகன் அற்புதம் செய்கிறார்
அண்டினோர்
வாழ்வினிலே
ஆ... என்ன ஆனந்தம் ஆ... என்ன
ஆனந்தம்
1. தண்ணீரைக் கடக்கும் போது என்னோடிருந்தாரே
அக்கினியில் நடக்கும் போது வேகாமல் காத்தாரே
இதுவரை நடத்தினார் இனியும் நடத்துவார்
நன்றியாலே நானும் பாடுவேன்
2. கோடி துதிகள் சொல்லி பாடு மனமே ஓசன்னா
எந்நாளும் காத்து ஏந்தி தாங்கி வந்த நேசரை
அடைக்கலம் தருபவர் அன்பால் அணைப்பவர்
ஆவியோடே அனுதினம் பாடுவேன்
3. கண்ணீரின் பள்ளத்தாக்கில் கடந்து வந்த நேரத்தில்
தாயாக நின்று எந்தன் இயேசு என்னை தேற்றினார்
பரவசம் கொள்கிறேன் மறுரூபமாகுவேன்
பாதி வானம் பறந்தே செல்கிறேன்
No comments:
Post a Comment