99. பாலர் பண்டிகை
பல்லவி
ஆனந்தப்
பண்டிகையை ஆசரிப்போம்
பாலரே நாம்
அனுபல்லவி
ஆசரிப்போம் - பாலரே நாம்
ஆர்ப்பரித் தகங்களிப்போம்
அன்புடன் ஆலயத்தில் அம்பரனையே
துதிப்போம் - ஆனந்த
சரணங்கள்
1. இயேசுவின் ரத்தத்தாலே நாம்
மீட்கப்பட்டோம் காக்கப்பட்டோம்
மீட்கப்பட்டோம் காக்கப்பட்டோம்
மீட்டுமுடி சூட்டப்பெற்றோம்
மீட்பரால் சங்கமதின் அங்கங்களாய்க் கூட்டப்பட்டோம்
- ஆனந்த
2. பாலர் இச்சங்கத்தாலே -பகவானருள்வரமே பெற்றோம்
பகவானருள் வரமே பெற்றோம்
பரிசுத்தமெய் -வேதம் கற்றோம்
பாரினில் பாலனான -பரன்சுதன் நல்நேசர் கண்டோம்
- ஆனந்த
3. செல்லுவோம் நேயர்களே சிலுவைக்கொடி கரம் படித்து
சிலுவைக்கொடி கரம் பிடித்து
வலுசெய்பேயின் - சிரமுடைத்து
வல்லமை நாதன் நாம - வாழ்த்துதல் கீதம்
படித்து - ஆனந்த
4. எண்ணடங்கா நன்மைகள் - எந்தை தந்தார் சந்ததமே
எந்தை தந்தார் - சந்ததமே
என்றும் துதி - வந்தனமே
இன்றும் ஆசீர் பெறுவோம் - ஏக சகோதரரே வாரும்
- ஆனந்த
5. உள்ளக் கருத்துடனே - ஒருமித்த பாசத்துடனே
ஒருமித்த -பாசத்துடனே
உற்சாக - மனதுடனே
உன்னதனார் சமூகம் - உவந்து காணிக்கை படைத்து
- ஆனந்த
6. பெற்ற தாய் தந்தையாரும் - உற்ற பெந்து சோதரரும்
உற்றபெந்து - சோதரரும்
கற்றோர் மற்றோர் போதகரும்
குற்றமென் றுரைத்திடும் துர்க்குணம் நீங்க
சற்குருவை வேண்டி - ஆனந்த
7. பாலியர் சங்கமென்றும் - பக்தியுற முத்திபெற
பக்தியுற - முத்தி பெற
நித்தியமாய் - தூதர் சூழ
அத்தனை சுத்தரென்று - ஆராதிக்கும்
அருளே பெற - ஆனந்த
https://www.youtube.com/watch?v=yWmtGpW1Ayo
No comments:
Post a Comment