பெத்லகேம் என்னும் ஊரில்

பெத்லகேம் என்னும் ஊரில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          பெத்லகேம் என்னும் ஊரில்

            மாட்டுத் தொழுவமதனில்

            தேவக்குமாரன் பாரொளி வேந்தன்

            பாலனாய் அவதரித்தார்

 

                        பிறந்தார் பிறந்தார்

                        இயேசு பாலன் பிறந்தார்

                        உதித்தார் உதித்தார்

                        உலகை மீட்க உதித்தார்

 

1.         முன்னொரு நாள் முதலாம் ஆதாம்

            பாவத்தில் விழுந்தான் - 2

            வீழ்ந்ததினால் சாபம் பெற்று

            தேவ அன்பை இழந்தான்

                        மானுடம் மீட்பு பெற

                        தேவ சாயல் திரும்ப பெற-2

            இன்றைய நாளில் இரண்டாம் ஆதாமாய்

            மேசியா தோன்றினார் - 2 - பிறந்தார்

 

2.         சத்திரத்தில் இடம் இல்லாமல்

            முன்னணையில் தவழ்ந்தார் - 2

            இதயத்தில் இடம் உண்டோ

            உன்னிடம் கேட்கிறார்

                        பாவம் போக்கிடுவார்

                        உன் சூழ்நிலை மாற்றிடுவார் - 2

            உனக்காக அவதரித்தார்

            இதயம் தருவாயா - 2 - பிறந்தார்

 

 

 

 

 

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு