அஞ்சாதே மரியாளே அஞ்சவே
வேண்டாம்
தேவனிடத்தில் நீயோ கிருபையை
பெற்றாய்
1. நீயோ கற்பமாகி ஒரு குமாரனைப் பெறுவாய்-2
இயேசு என்ற பெயரை நீ அவர்க்கு கொடுப்பாயே
2. அவரோ பெரியவராய் என்றுமே ஆட்சிச் செய்வார்
உன்னதமான தேவ திருக்குமாரனானாரே
3. யாக்கோப்பின் மரபினரை அவர் என்றென்றும் ஆண்டிடுவார்
அவரின் ஆட்சி அதற்கு என்றும் முடிவு இல்லையே
No comments:
Post a Comment