புதிய பாட்டுப் பாடுவோம்
புதிய
பாட்டுப் பாடுவோம் - 2
குதித்து குதித்து பாட்டுப்
பாடும்
குருவி கூட்டங்களே
தூய தேவனை துதித்து பாடும்
தூத கணங்களே
கை தட்டி பாடுவோம்
அல்லேலூயா சொல்லுவோம் (2)
1. அல்லும் பகலும் பாடி துதிக்கும்
அன்பர் கூட்டங்களே
அழியா ஜீவன் வாழ்வு அளித்த
வல்ல இயேசுவையே ....
2. வெள்ளையங்கி தரித்து நிற்கும்
திரள் திரள் கூட்டங்கள்
குருத்தோலைகள் பிடித்து நிற்கும்
சுத்தர் கூட்டங்கள்...
3. சுரமண்டல நாதம் கேட்கும்
ஓசை தானதுவே
மீட்கப்பட்டோர் பாடித் துதிக்கும்
புதிய பாட்டதுவே
Comments
Post a Comment