புத்தியாய் நடந்து வாருங்கள்-2

புத்தியாய் நடந்து வாருங்கள் திரு வசனப்-2

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

269. இராகம்: துசாவந்தி                                              ஆதி தாளம் (450)

 

                             பல்லவி

 

          புத்தியாய் நடந்து வாருங்கள் - திரு வசனப்

            பூட்டைத் திறந்து பாருங்கள்.

 

                             அனுபல்லவி

 

                        சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,

                        தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,

                        நித்தமும் ஜெபம், தருமம்,

                        நீதி செய்து, பாடிக்கொண்டு - புத்தி

 

                             சரணங்கள்

 

1.         ஏசுக் கிறிஸ்தையன் பதத்தை துதித்துப் போற்றி,

            இன்பமாய்ச் சத்திய வேதத்தை

            வாசித்து ஆராய்ந்து, நலத்தைப்-பிடித்துளத்தில்

            வைத்துக்கொண்டு, இவ்வுலகத்தை

            நேசியாமல் பகைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்

            ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் - புத்தி

 

2.         ஐயன் வருவார் நமைச் சேர்க்க, பூமியில் என்றும்

            ஆளுகை செய்தொன்றாய் இருக்க

            வையக மனுக்கள் திகைக்க, கிறிஸ்தோர்களின்

            மகிமை மென்மேலும் கதிக்க,

            துய்யன் சீயோன் மலையில் சுதந்தராய் வீற்றிருக்க,

            மெய் இது பொய் அல்ல; உங்கள் மேன்மை இதை எண்ணித்தினம் - புத்தி

 

3.         பரிசுத்த கூட்டம் அல்லவோ?-நீங்கள் எல்லாரும்

            பரன்மகன் தேட்டம் அல்லவோ?

            தரிசிக்க நாட்டம் அல்லவோ?-கிறிஸ்தின் உள்ளம்

            தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ?

            பரிசனை செய்தவர் போல, பாதத்தை மனதில் உன்னி,

            கரிசனை யோடு தேடிக், காணத் தீயோன் நாணப் படிப் - புத்தி

 

4.         எத்தனை என்று நான் சொல்லட்டும்-திருமறை தான்

            எத்தித் தினம் சாற்றி வரட்டும்

            சத்திய தேவாவி சொல்லட்டும்;-உங்கள் மனது

            தன்னிலே நல் எண்ணம் வரட்டும்

            நித்திய பிதா குமாரன் நேர் நல் ஆவி, மூவராலும்,

            பத்தி, விசுவாசம், ஜீவ பாக்கியம் உண்டாக, ஆமென்!

 

 

- மரியான் உபதேசியார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே