புத்தியாய் நடந்து வாருங்கள்-1
268. இராகம்: துஜாவந்தி ஆதி தாளம்
பல்லவி
புத்தியாய் நடந்து வாருங்கள்;-திருவசனப்
பூட்டைத் திறந்து
பாருங்கள்.
அனுபல்லவி
சத்தியத்தைப் பற்றிக்கொண்டு, தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,
நித்தமும் ஜெபம், தருமம்,
நீதி செய்து, பாடிக்கொண்டு - புத்தி
சரணங்கள்
1. ஒன்றான பிதாவின் மக்களே;-கிறிஸ்தின் ரத்தத்
தொன்றுடன் சகோதரர்களே,
குன்றாத சுதந்தரர்களே-நீங்கள்
எல்லாரும்
கோதில்லாத[1] நீதிமான்களே;
சண்டாளப் பசாசின் மக்கள் தங்களைப்போல் வாதுபண்ணிக்
கொண்டுதிண்டு
முண்டு செய்தால், கூற என்ன நீதி உண்டு;-புத்தி
2. அன்பு கூர்ந்திருக்கச்
சொன்னாரே,-கிறிஸ்து நமை
ஐக்கியமாய்ப்
போகச் சொன்னாரே;
இன்பமாய் நடக்கச் சொன்னாரே;-ஆவியில் ஒன்றாய்
இசைவாகப் பேசச்
சொன்னாரே;
பண்பிலா மிருகம்
போலும், பாயும் பேயின் மக்கள் போலும்
துன்பம் பொய்கள்
வன்மம்[2] பகை
தூஷணம் செய்யாமல் நல்ல - புத்தி
3. ஆருடைய பிள்ளைகள்
நீங்கள்?-திரு உரையில்
அறிந்து உணர்ந்து பாருங்கள்;
சீருடைய தெய்வப்
பிள்ளைகள்-நீங்கள்; ஏதிந்த
தித்தரிப்பு[3] செய்யும்
வகைகள்?
கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்
நேருடன் ஆராய்ந்து
பார்த்து நித்திய ஒளியில் தானே - புத்தி
4. ஆவியை அடக்காதிருங்கள்;-மறை
சொல்லுவதை
அசட்டை செய்யாமல் பாருங்கள்;
ஜீவனை அடையத் தேடுங்கள்;-ஏசுக் கிறிஸ்தின்
சிந்தையைத்
தரித்துக் கொள்ளுங்கள்;
மேவியே ஜெபம்,
மன்றாட்டு, விண்ணப்பம் வேண்டுதலோடு
தாவி, ஏசுவைப்
பிடித்து தளரா நடையோ டுன்னிப்[4] - புத்தி
5. ஜாதி பேதம் சொல்வர் அல்லவோ? கிறிஸ்தவர்கள்
தாமே தெய்வ ஜாதி அல்லவோ?
நீதி பரிசுத்தர் அல்லவோ? மகிமையுள
நேசம் மிகு
ராஜர் அல்லவோ?
வேதனை உண்டாக்கும் ஜாதி வேற்றுமையை விட்டு,
மறை
ஓதியபடி[5] எல்லாரும்
உத்தம கிறிஸ்தோராகப் - புத்தி
6. பொக்கிஷத்தை எங்கே
வைத்தீர்கள்?-பரத்தில் வைத்தால்
பூரண பலன் அடைவீர்கள்;
கக்கிச[6] வழியே
செல்வீர்கள்-கடைசியிலே
கண்டு ஜீவனை அடைவீர்கள்;
முக்கியமாய் எதைத்தேட
முன்னவன் சொன்ன சொற்படி,
மெய்க்கிறிஸ்
திருப்பிடத்தின் மேலானதை நாடித்
தேடிப் - புத்தி
- மரியான்
உபதேசியார்
Comments
Post a Comment