நான் பாடிடும் பூபாளமே

நான் பாடிடும் பூபாளமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          நான் பாடிடும் பூபாளமே

            முறையோ பிழையோ நீ கேளடா...

 

                        என் பாலனோ என் தேவனோ

                        தாயாக நான் பாட நீ தூங்கடா

                        விண் தாளமோ மண் கானமோ

                        எது உன்னை ஈர்த்தாலும் அதைக்கேளடா

 

1.         வான் போற்றும் உன்னை பார் நோக்கும் கண்ணை,

            தவறேதும் இல்லாமல் கொண்டேன்.

            பலர் தூற்றினாலும் சிலர் போற்றினாலும்,

            தன்மானம் விடுத்தேனும் காப்பேன்.

            உன்னை ஊர் ஏற்றிடும் நாள் வந்ததும்

            யூதரின் ராஜாவே என் தேவா என்பேன்.

                        நான் பாடிடும் பூபாளமே

                        முறையோ பிழையோ நீ கேளடா...

                        ஆராரிரோ ஆராரிரோ (4)

 

2.         சிறு ஆடு மெல்ல வெகுதூரம் செல்ல,

            அதைத்தேடி ஒரு மேய்ப்பர் வந்தார்.

            வினை ஏற்றுக்கொள்ள முடி ஏற்க அல்ல,

            என்னைத் தேடி ஒரு மீட்பர் வந்தார்.

            என்னைக் காப்பாற்றிட கரை சேர்த்திட,

            சாவேற்க வந்தோனே என் ஜீவன் என்பேன்

                        நான் பாடிடும் பூபாளமே

                        முறையோ பிழையோ நீ கேளடா...

                        ஆராரிரோ ஆராரிரோ (4)

 

- RJ.Ryjul

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு