(கன்னிமரியாளின் கீதம்)
ஆண்டவரே
சரணம் பணிந்தேன்
திருவருள் தருவாய் நீ மாதேவா
அடிமையின் தாழ்மையை நீக்கிடவே
அளவில்லா கிருபைகள் ஈந்தனரே
1. மண்ணுலகில் நான் பேருபெற்றேன்
புண்ணியமூர்த்தியின் அருளாளே
விண்ணுலகின் சித்தம் நிறைவேறவே
எண்ணில்லா தயை பெற்றேன் என் இறைவா
2. என் ஆவி தேவனில் களிகூருதே
என் ஆத்துமா இரட்சகரை துதிக்கின்றதே
வல்லவர் கிருபையை அருளினாரே
வாழ்த்தியே அவர் பாதம் பணிந்திடுவேன்
- Mallika Duraipandian
No comments:
Post a Comment