தாவீதின் ஊரினிலே முன்னணை மீதினிலே
தாவீதின் ஊரினிலே
முன்னணை மீதினிலே
மண்ணில் மாந்தர்கள் மகிழ்ந்திடவே
தாழ்மையாகவே
வந்தவரே - 2
நம்மையே மீட்டிடவே
தன் ஜீவனைத்
தந்தவரே
அந்த
அன்பை நாம் எண்ணியே
நாள்தோறும் சொல்லியே
இந்நாளைக் கொண்டாடுவோம் - 2
1. வந்தாரே வந்தாரே தன்னையே தந்தாரே
உன்னையும் என்னையும் மீட்கத்தானே
உள்ளத்தைத்
தருவதே உன்னத நோக்கமே
மண்ணில் வாழும் மாந்தர்களே
- 2
அவர் தாழ்மையின் ரூபமாய்ப்
பிறந்தார்
தம்மைத்தாமேதான்
பலியாய் தந்தார்
இந்த நற்செய்தி உலகுக்குச் சொல்வோம்
இந்நாளைக் கொண்டாடுவோம்
- தாவீதின் ஊரினிலே
- Jebaraj
Comments
Post a Comment