ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானே
ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானே
ஆவியானவர் காற்றாய் வீச பெருமழை பெய்திடுமே - 2
உன்னதத்திலிருந்து உன்மேல் ஆவியை ஊற்றிடுவார்
உலர்ந்துபோன உன்னை இயேசு உயிர் பெறச் செய்திடுவார் - 2
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர் முற்றிலுமாய் விலகும் நேரமிது - 2
1. முன்மாறியும் பின்மாறியும் சீராய் பொழிந்திடுவார்
காய்ந்திருந்த உந்தன் வாழ்வை கனியாய் நிரப்பிடுவார்
- 2
தரிசாய்க் கிடந்த உந்தன் நிலத்தை விளையச் செய்திடுவார்
உன் கை செய்யும் வேலை எல்லாம் ஆசீர்வதித்திடுவார் - 2 - உங்கள்
2. வனாந்திரம் வயல்வெளியாக மாறும் நேரமிது
அவாந்திரம் ஆறுகளாக பாயும் காலமிது - 2
சொப்பனத்தாலும் தரிசனத்தாலும் இயேசு இடைபடுவார்
தீர்க்கதரிசியாய் உன்னை மாற்றி அவரே வெளிப்படுவார் - 2 - உங்கள்
பெருமழை ஒன்று பெய்யும்
நம் தேசத்தின் மீது பெய்யும் - 2
ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார்
பெருமழை ஒன்று பெய்யும்
நம் தேசத்தின் மீது பெய்யும்
ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார்- 2
ஆசீர்வாத மழையைப் பொழிந்திடுவார்
Comments
Post a Comment