இராத்திரியில் நட்சத்திரம் செல்லுவதைப் பாரு

இராத்திரியில் நட்சத்திரம் செல்லுவதைப் பாரு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   இராத்திரியில் நட்சத்திரம் செல்லுவதைப் பாரு

                        சாஸ்திரிக்குப் பாதையினைச் சொல்லுவதைப் பாரு

                        பாராளும் கோமகன்தானோ - அம்மம்மா

                        இயேசென்னும் மாபரன்தானோ

 

1.         தொட்லிலின்றி தூங்குகின்ற தூயவனைப் பார்

            கட்டிலின்றி கண்ணுறங்கும் கண்மணியைப் பார்

            தாழ்மையுடன் தானணிந்த கந்தையினைப் பார்

            வானம் விட்டு மண்ணில் வந்த விந்தையினைப் பார்

            பூலோகை மீட்பவர்தானோ - இயேசப்பா

            நல்வழியில் சேர்ப்பவர்தானோ

 

2.         பாவங்களைப் போக்குகின்ற நல்லவர்தானோ

            பாவிகளை இரட்சிக்கின்ற வல்லவர்தானோ

            தேடிடவும் இரட்சிக்கவும் பூமியில் வந்தார்

            மீட்கும் பொருளாக அவர் ஜீவனைத் தந்தார்

            மேலான தேவன் இவரோ இயேசப்பா

            பூலோகின் இராஜன் இவரோ

 

3.         மண்குளிரும் காலையினில் மன்னவனைப் பார்

            கண்குளிரும் காட்சியினைப் பெத்தலையில் பார்

            மா திரளாய் தூதர்களின் சேனையினைப் பார்

            ஆத்தொழுவில் ஸ்தோத்தரிக்கும் பாடல்களைப் பார்

            உன்னதத்தின் சங்கீதம்தானோ அம்மம்மா

            இந்நிலத்தில் சந்தோசம்தானோ                     

 

- Dr. V.C. அமுதன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு