ஓ பெத்லெகேம் முன்னணையண்டையிலே

ஓ பெத்லெகேம் முன்னணையண்டையிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                    ஓ! பெத்லெகேம் முன்னணையண்டையிலே

                        ஏகோபித்து வாருங்கள் பிள்ளைகளே

                        இதோ! இரு மைந்தனை நித்ய பிதா

                        ஈவாக அளித்த மா தூய இரா.

 

1.         விளக்கு நன்றாகப் பிரகாசித்ததே

            இப்பாலகன் வெள்ளைத் துணிகளிலே

            சுற்றுண்டு கிடக்கிறார் தூதரிலும்

            சிறந்த இப்பிள்ளையைப் பணியவும்.

 

2.         வைக்கோல் மேல் கிடக்கிற பிள்ளையண்டை

            மரியாள், யோசேப்பும் களிக்க, அதை

            ஊர் மேய்ப்பர் வணங்க ஆகாயத்திலே

            தூதர்களின் திரள் துதிக்கிறதே.

 

3.         அனைவரும் கைகளைக் கட்டிக்கொண்டே

            தாழ்வாய் முழங்கால் படியிட்டிருந்தே

            தொழுவீர் இப்பிள்ளையைத் மேய்ப்பரைப்போல்

            தூதர்களின் கூட்டத்தில் துதியுங்கள்

 

4.         துதிக்கிறோம் நேசிக்கப்பட்டவரே,

            நீர் எங்கள் எல்லோரையும் ரட்சிக்கவே

            இம் முன்னணையில் மிக்க ஏழை ஆனீர்

            நீர் மரத்தில் மாளவும் மனங்கொண்டீர்

 

5.         பிள்ளைகளில் அருமையானவரே

            ஈடாக எதைத் தருவோம், உமக்கே

            இவ்வுலகப் பொக்கிஷத்தை விரும்பீர்!

            நொறுங்கிய நெஞ்சை நீர் நேசிக்கிறீர்.

 

6.         இதோ, இதயங்களை நல்மனதாய்

            கொடுப்போம், அவவைகளைக் கிருபையாய்

            நீர் ஏற்றுக்கொண்டு உந்தன் ஐக்யத்திலே

            மா தூய்மையாய் காரும், எம் ரட்சகரே.

           

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு