இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
என்னால்
ஒன்றும் கூடாதென்று
என்னை நான்
தந்துவிட்டேன்
உம்மால்
எல்லாம் கூடுமென்று
உம்மை நான்
நம்பியுள்ளேன்
1. எல்ஷடாய் சர்வ
வல்லவரே
எல்லாம்
செய்பவரே
இல்லாதவைகளை
இருக்கின்றதாய்
வரவழைப்பவரே
ஆபிரகாமுக்கு
செய்தவர்
எனக்கும்
செய்ய வல்லவர்
2. யெகோவாயீரே
எல்லாம்
பார்த்துக் கொள்வார்
கண்ணீரை
துருத்தியில்
எடுத்து வைத்து
ஏற்றதாய் பலன்
தருவார்
அன்னாளை களிப்பாய்
மாற்றினவர்
என்னையும்
மாற்றிடுவார்
3. எல்ரோயீ என்னை
காண்பவரே
என்
கண்ணீர் துடைப்பவரே
கருமுதலாய்
என்மேல் கண் வைத்து
நன்மைகள் செய்பவரே
ஆகாரின் கண்ணீரை
மாற்றினவர்
என்
கண்ணீர் மாற்றிடுவார்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment