அந்த நீல
வானம் வெண்மை ஆகிட
அந்த நள்ளிராவில் தூதர் பாடிட
தாவீதூரில் இரட்சகர் ஜெனித்தார்
ஜெனித்தார் ஜெனித்தார்
இயேசு பாலகனாக இன்று ஜெனித்தார்
ஜெனித்தார் ஜெனித்தார்
இயேசு முன்னணையில் இன்று ஜெனித்தார்
1. வயலில் இரவில் மேய்ப்பர்கள்
வியப்பில் பயத்தில் ஆயர்கள்
வாடை காற்று தென்றலாக வீசிற்றே
பனியும் கூட தேன் துளியாய் மாறிற்றே -
அந்த நீல வானம்
2. குளிரில் குடிலில் கோமகன்
மரியின் மடியில் மன்னவன்
கண் குளிர மேசியாவை கண்டனர்
கிடைத்திடாத பாக்கியம் பெற்றனர் - அந்த
நீலவானம்
No comments:
Post a Comment