அல்லேலூயா
துதி பாடுவோம்
அன்பின் பெருமானுக்கே
படைத்திடுவோம் அவர் பாதத்தில்
இதயத்தை காணிக்கையாய்
1. இலவசமாகவே இரட்சிப்பித்தார்
இரக்கங்களினாலே முடி சூட்டினார்
இன்னல் வேளை தேவனே ஆறுதல்
வல்லமையாய் தேவனின் புகழ் பாடுவோம்
2. ஞானத்தின் பலகணி திறந்திடவே
வல்லவர் அருள் மொழி பொழிந்திடவே
நல்ல தீபம் அன்பர் பாதம் பணிந்து
மனமுவந்து காண விரைந்திடுவோம்
No comments:
Post a Comment