துய்ய திருப் பாலனே

துய்ய திருப் பாலனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

366. இராகம்: காம்போதி              ஆதி தாளம்

 

கண்ணிகள்

 

1.       துய்ய திருப் பாலனே; துன்ப வினை சூழ்ந்ததோ-மகனே

          வையகத்தோ ரால் நமக்கு வந்த பலன் இது தானோ?

 

2.         விலகுங் கனி புசித்து வீழ்ந்த பாவிகளுக்காய், மகனே

            வலமைத் தேவாதி தேவன் மனுடன் ஆகவேண்டாமோ?

 

3.         கோபாக்கினை பெரிது, குற்றமில்லாத ஆடே;-மகனே

            பாபத்தைச் சகித்துப் பாடுபட்டுத் தரிப்பாய்

 

4.         நரகத்தைக் காணாமல் நரர்குலம் வாழவே-மகனே

            தருணத்தில் சென்றுலகின் சாபத்தையே தவிர்ப்பாய்

 

5.         மானிடனாய்ப் பிறந்து, வல்வினையைச் சுமந்து, மகனே

            ஈனச் சிலுவை தனிலே அறையுண் டிறந்து

 

6.         மரணத்தை ஜெயங்கொண்டு வலிய சர்ப்பத்தை வென்று-மகனே

            நரகத்தைப் பூட்டி-வான நாட்டில் வருகுவாயே

 

- வேதநாயகம் சாஸ்திரியார்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு