நீதிமானின் கூடாரத்தில கெம்பீரச் சத்தம்

நீதிமானின் கூடாரத்தில கெம்பீரச் சத்தம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    நீதிமானின் கூடாரத்தில கெம்பீரச் சத்தம்

                        யாக்கோபின் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்

                        தம்புற கின்னர வீணையோடு துதிகள் ஆயிரம்

                        நான் துதிக்கும் நாவு எழுப்பிடுதே இனிய சங்கீதம்

 

1.         பறவைப் பாடுதே நீ பாடக்கூடாதா

            அந்த இயற்கை துதிக்குதே நாம் துதிக்கக்கூடாதா

            நம் பாடு மரணம் ஏற்க இயேசு பிறந்ததினாலே

            நம் பாவமெல்லாம் பறந்து போச்சி பாடிடுவோமே

 

2.         புதிய வல்லமை புதிய கிருபை எனக்கு வேண்டுமே

            அதை கொடுக்கும் தேவ தேவனை நான் துதிக்க வேண்டுமே

            புதிய நன்மை தினமும் என்னைத் தொடர வேண்டுமே

            ஜீவன் இருக்கும் வரையில் உமது வீட்டில் நிலைக்க வேண்டுமே

 

3.         ஆடிப் பாடுவேன் கூடி நடனமாடுவேன்

            என்னை தேடி வந்த தேவனையே போற்றிப் பாடுவேன்

            கைத்-தாளத்தோடும் மேளத்தோடும் கீதம் பாடுவேன்

            எக்காளம் ஊதி எரிகோ மதிலை இடித்துப் போடுவேன்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு