அழகான
புது வெள்ளி ஒன்று
வான் மீது மலர்ந்தது இன்று
வானிலே தூதர்கள் கானங்கள்
பாடிட
இயேசுவும் பிறந்திருந்தார்
1. மந்தையை மேய்த்திடும் கூட்டம்
மேய்ப்பர்கள் காத்திடவே
விண் தூதர் கூட்டம் செய்திச் சொல்ல
பாலனைக் காணச் சென்றார்
2. வானிலே வெள்ளியும் ஒன்று
சாஸ்திரிகள் காணவே
பொன் தூபவர்கம் யாவும் தந்து
பாலனைப் பணிந்து சென்றார்
3. தேவா உம் ஏழையின் கோலம்
பாவி எம்மை மீட்கவோ
இந்நாளில் பாடும் கீதம் கேட்டு
பாலனே கண் அயர்வாய்
No comments:
Post a Comment