ஆகாய
மாளிகையில் எந்தன்
ஆண்டவர் இருக்கின்றார்
அழிந்த மலர்களிலே - அவர்
அழகாய் பொழிகின்றார்
1. விந்தையுருவான எழிலே
புவி மந்தை தினம் காக்கும் குழலே
எந்தன் குறை தீர்க்கும் பரனே
உந்தன் வருகை உலகுக்கு அரணே
2. உலகம் உருண்டோடும் பலகை
அதில் இறைவன் தினம் வரையும் கவிதை
உன்னை நினைந்தேங்கும் அழுகை
இந்த உலகம் அருளிய சிலுவை
3. இழந்த உளம் தேடும் விழியே
என்றும் இழிந்த எனை நோக்கும் ஒளியே
நலிந்த எனைக் காக்கும் பொருளே
உந்தன் விழிகள் உலகுக்கு அருளே
- ஒய். டேவிட்
No comments:
Post a Comment