ஆதி அந்தம்
இல்லாதவர்
அன்பின் தேவனின் மைந்தன் அவர்
அன்பின் மொழியாய் மொழிந்தனரே
மன்னிப்பை வேண்டினாரே
பிதாவே மன்னியும்
தாங்கள் செய்வது இன்னதென்று
அறியாமல் இருக்கின்றனர்
எனும் மன்னிக்கும் மொழி அதுவே
1. பாவலோகம் மீட்பதற்காய்
பாரில் வந்து அவதரித்தார்
பிதாவின் சித்தம் நிறைவேற
மன்னிப்பை வேண்டுகின்றார் - பிதாவே
2. தேகம் வேதனை அடைந்தும்
நாவு வறண்டு போயிடினும்
நம் மீது உள்ள அன்பதனால்
மன்னிப்பை வேண்டுகின்றார் - பிதாவே
No comments:
Post a Comment