Posts

Showing posts from July, 2013

ஆயிரம் ஆயிரம் பாடல்களை

கீதங்களும் கீர்த்தனைகளும் - 25 கிறிஸ்தவ கீர்த்தனைகள் - 231 1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை     ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்!     யாவரும் தேமொழிப் பாடல்களால்     இயேசுவைப் பாடிட வாருங்களேன்.                 அல்லேலூயா! அல்லேலூயா!                 என்றெல்லாரும் பாடிடுவோம்!                 அல்லலில்லை! அல்லலில்லை!                 ஆனந்தமாய்ப் பாடிடுவோம். 2. புதிய புதிய பாடல்களைப்     புனைந்தே பண்களும் சேருங்களே     துதிகள் நிறையும் கானங்களால்     தொழுதே இறைவனைக் காணுங்களே - அல்லேலூயா 3. நெஞ்சின் நாவின் நாதங்களே     நன்றி கூறும் கீதங்களால்     மிஞ்சும் ஓசைத் தாளங்கள...

பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே 18.     (279)                                                  ஆதிதாளம் பல்லவி                      பாடித் துதி மனமே; பரனைக் கொண்                     டாடித் துதி தினமே. அனுபல்லவி                நீடித்த காலமதாகப் பரன் எமை             நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் - பாடி சரணங்கள்   1.          தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்             செப்பின தேவபரன் இந்தக் காலத்தில் ...

கண்களை ஏறெடுப்பேன்

கண்கணை ஏறெடுப்பேன் 17. பியாகு                                                     சாபுதாளம் பல்லவி              கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என்             கண்களை ஏறெடுப்பேன். அனுபல்லவி                விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்             தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும்.  - கண் சரணங்கள்   1.          காலைத்தள்ளாட வொட்டார்-உறங்காது காப்பவர்             காலைத்தள்ளாட வொட்டார், ...

சுய அதிகாரா சுந்தரக் குமாரா

சுய அதிகாரா, சுந்தரக்குமாரா 15.     கமாஸ்                                                ஆதிதாளம் பல்லவி            சுய அதிகாரா, சுந்தரக் குமாரா!            சொந்த உலகந்தனைத் துறந்த மரி மைந்தனான   - சுய சரணங்கள் 1.          அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையே,             அதையொரு பம்பரம் போலிசைத்தனையே,             துகில்போலா காயமதை லகுவாய்ச் சமைத்ததிலே             சோதி பல மாதிரியாய்த் தூக்கி அங்கிலங்க வைத்த - சுய 2.  ...

அமலா தயாபரா அருள்கூர் ஐயா

அமலா தயாபரா 12. (33) ரீதிகௌள                                         ஆதிதாளம் பல்லவி            அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா,-குருபரா சரணங்கள் 1.          சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்             அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த             - அம 2.          அந்தம் அடி [1] நடு இல் லாத தற்பரன் ஆதி,             சுந்தரம் மிகும் அதீத [2] சோதிப்பிரகாச நீதி. - அம 3.          ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,  ...

வந்தனம் வந்தனமே தேவ துந்துமி

வந்தனம் வந்தனமே 11. (35) சங்கராபரணம்                                             சாபுதாளம் பல்லவி   வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி [1] கொண்டிதமே! [2] - இது   வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம். சரணங்கள் 1. சந்ததஞ்சந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே,- நாங்கள்      தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே. 2.   சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, - எங்கள்      சாமி, பணிவாய் நேமி [3] துதிபுகழ் தந்தனமே நிதமே! 3.   சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, - சத்ய      சருவேசுரனே, கிருபாகரனே, உன்சருவத்துக்குந் துதியே. 4. உன்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும்-பார்த்தால்      ஒப்பே தருங் காவலே உன்னருளுக்க...

தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே

தெய்வன்பின் வெள்ளமே 8. குந்தளவராளி                                                      ஆதிதாளம் கண்ணிகள் 1.           தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,             மெய் மனதானந்தமே!             செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை             ஐயா, நின் அடி பணிந்தேன் 2.          சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல             எந்தாய் துணிவேனோ யான்?             புந...

துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே

துதிக்கிறோம் உம்மை 7. (155 L) சங்கராபரணம்                                          ஆதிதாளம் 1.           துதிக்கிறோம் உம்மை - வல்ல பிதாவே             துத்தியம் செய்வோம் - உமை மா அரசே             தோத்ரம் உம் மாட்சிமைக்கே - பரனே             துந்துமி மாட்சிமைக்கே - பிதாவே. 2.          சுதனே யிரங்கும் - புவியோர் கடனைச்             சுமந்ததைத் தீர்த்த - தூயசெம்மறியே,             சுத்தா ஜெபங்கேளும் - பரன்வலத்    ...

சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம்

சீர்மிகு வான்புவி தேவா 6. (277) சங்கராபரணம்                                             ஆதிதாளம் 1.           சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம்,             சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,             ஏர்குணனே தோத்ரம், அடியர்க்-கு             இரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா. 2.          நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம்,             நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்,             ஆர் மணனே, தோத்ரம், உனது ...

சருவ லோகாதிபா நமஸ்காரம்

சருவ லோகாதிபா 5.       (29) சங்கராபரணம்                                         ஆதிதாளம் 1.           சருவ லோகாதிபா, நமஸ்காரம்!             சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!             தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த             தயாபர பிதாவே, நமஸ்காரம். 2.          திரு அவதாரா, நமஸ்காரம்!             ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!             தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்     ...

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ

சீர்திரியேக வஸ்தே நமோ 4.       பூரிகல்யாணி                                                  ஆதிதாளம் பல்லவி                         சீர்திரியேக வஸ்தே, நமோ, நமோ, நின்                         திருவடிக்கு நமஸ்தே நமோ, நமோ! அனுபல்லவி                         பார்படைத்தாளும் நாதா,               ...

திரி முதல் கிருபாசனனே சரணம்

திரிமுதல் கிருபாசனனே 2.       (3) சங்கராபரணம்                                           ஆதிதாளம் 1.           திரி முதல் கிருபாசனனே, சரணம்!             ஜெக தல ரட்சக தேவா, சரணம்!             தினம் அனுதினம் சரணம்; - கடாட்சி!             தினம் அனுதினம் சரணம், - சருவேசா! 2.          நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்!             நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம்             நம்பினேன் இது தருணம் - தருணம்;...

ஆ, என்னில் நூறு வாயும் நாவும்

O dass ich tausend Zungen hatte Surrey.   Bavarian Supplement 38 387                                                                 9, 8, 9, 8, 8, 8 (1-ஆம் பாகம்) 1.        ஆ, என்னில் நூறு வாயும் நாவும்                         இருந்தால், கர்த்தர் எனக்கு             அன்பாகச் செய்த நன்மையாவும்,                         அவைகளால் பிரசங்கித்து    ...