அடியார்
உமைவந் தடைந்தனரே
அழியார் வாழ்வினில் உயர்ந்தனரே.
தடைகள் யாவையும் தகர்த்தோடி
தனிப்பெருஞ் செல்வம் தனைநாடி.
1. கிறிஸ்துவுக்காக
வாழ்ந்தோராய்
கிறிஸ்துவின்
சாயலை நயந்தோராய்
திருப்பணி
விரைந்தே புரிந்தோராய்
திருமறை
சார்ந்தே
சிறந்தோராய்
- அடியார்
2. திருச்சபைக்காக
உழைத்தோராய்
தினந்தினம்
துன்பம் சகித்தோராய்
சிறுமைகள்
ஏற்றே மகிழ்ந்தோராய்
சிலுவையை
உலகினில்
சுமந்தோராய்
- அடியார்
3. தலைமுறை
வருவோர் தமக்கெல்லாம்
தகுநெறி
காட்டிச் சென்றனரே
பலராம்
சாட்சிகளுடன் சேர்ந்தார்
பணிசெய்ய
எம்மை
ஏவுகின்றார்
- அடியார்
No comments:
Post a Comment