1. அத்திமரம்
எப்படித்தான் பட்டுப் போனதையோ
மெத்தவும் குளிர்ச்சியாய் நேற்று நின்றதே
ஐயோ
2. நாயனார் ஏசு திங்கள் காலையதிலே
தேயமாய் பெத்தானியா விட்டு எருசலேம் சென்றார்
3. பசியினால் புசிக்க ஏதும் அகப்படும் என்று
சுவாமி இயேசு வழியில் நின்று சிந்தனை செய்தார்
4. திட்டமாய் பார்க்க செழும் அத்தி ஒன்று கண்டு
இலை இருக்க கனி இருக்கும் என்று இறைவர்
சொன்னார்
5. கிட்ட வந்து பார்க்க இலை மட்டுமே கண்டு
பட்டுபோவாய் இனி உனில் கனிகிட்டாதே என்றாக.
6. காட்டில் நின்ற அத்தி எல்லாம் பட்டது போல
வெறும் கட்டைகளை மட்டும் காட்டி விட்டதினாலே
No comments:
Post a Comment