யூதேயாவின் ஞான சாஸ்திரி


Bright the vision that delighted

Laus Deo

13                      8, 7, 8, 7

1.         யூதேயாவின் ஞான சாஸ்திரி
            விந்தைக் காட்சியைக் கண்டான்;
            கோடாகோடி தூதர் கூடி
            பாடும் கீதத்தைக் கேட்டான்;

2          உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா,
            வானம் பூமி நிரப்பும்;
            தூய தூய தூய கர்த்தா
            உந்தன் துதி பெருகும்"

3          என்றே ஆசனத்தைச் சூழ்ந்து
            கேரூப் சேராபீன்களும்;
            ஆலயம் நிரம்ப நின்று
            மாறி மாறிப் பாடவும்.

4          "தூயர் தூயர் தூயரான
            சேனைக் கர்த்தர்" எனவும்,
            தூதர் பாட்டு விண்ணில் ஓங்க
            மண்ணில் இன்றும் ஒலிக்கும்

5          "உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா,
            வானம் பூமி நிரப்பும்;
            தூய, தூய, தூய கர்த்தா
            உந்தன் துதி பெருகும்;"

6          என்றே, வான சேனையோடு
            பூதலத்தின் சபையும்
            கர்த்தாவை நமஸ்கரித்து
            துதி கீதம் பாடிடும்.

(252-254, 256, 267 பாக்களும் பொருத்தமானவை)

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு