06 February 2017

எங்கும் நிறைந்த தெய்வமே


Rivaulx

18                                                                                     L.M.

1.         எங்கும் நிறைந்த தெய்வமே,
            ஏழை அடியார் பணிவாய்
            துங்கவன் உந்தன் பாதமே
            ஸ்தோத்திரிக்கின்றோம் ஏகமாய்.

2.         உலக எண்ணம் நீங்கியே
            உந்தனில் திட மனதாய்
            நலமாய் உள்ளம் பொங்கியே
            நாடித் துதிக்கச் செய் அன்பாய்.

3.         கேட்டிடும் தெய்வ வாக்கியம்
            கிருபையாய் மனதிலே
            நாட்டிட நின் சிலாக்கியம்
            நாங்கள் நிறையச் செய்காலே.

4.         தூதர்கள் கூடிப் பாடிடும்
            தூயர் உம்மை மா பாவிகள்
            பாதம் பணிந்து வேண்டினோம்
            பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...