ஆத்மமே உன் ஆண்டவரின்


Praise my soul the King of Heaven
Alleluya dulce carmen
Praise my Soul                                                                    

1                                                          8, 7, 8, 7, 8, 7

          1.       ஆத்மமே, உன் ஆண்டவரின்
                                    திருப்பாதம் பணிந்து,
                        மீட்பு, சுகம், ஜீவன், அருள்
                                    பெற்றதாலே துதித்து
                        அல்லேலூயா, என்றென்றைக்கும்
                                    நித்திய நாதரைப் போற்று.

            2.         நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
                                    தயை நன்மைக்காய்த் துதி;
                        கோபங் கொண்டும் அருள் ஈயும்
                                    என்றும் மாறாதோர் துதி;
                        அல்லேலூயா, அவர் உண்மை
                                    மா மகிமையாம், துதி.

            3.         தந்தைபோல் மா தயை உள்ளோர்
                                    நீச மண்ணோர் நம்மையே
                        அன்பின் கரம்கொண்டு தாங்கி
                                    மாற்றார் வீழ்த்திக் காப்பாரே;
                        அல்லேலூயா, இன்னும் அவர்
                                    அருள் விரிவானதே.

            4.         என்றும் நின்றவர் சமூகம்
                                    போற்றும் தூதர் கூட்டமே;
                        நாற்றிசையும் நின்றெழுந்து
                                    பணிவீர் நீர் பக்தரே;
                        அல்லேலூயா, அனைவோரும்
                                    அன்பின் தெய்வம் போற்றுமே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு