அலங்கார வாசலாலே


2. All saints; Neander                                               8, 7, 8, 7, 7, 7

"Open now thy gates of beauty"

1.       அலங்கார வாசலாலே
                        கோவிலுட் ப்ரவேசிப்பேன்;
            தேவ வீட்டில் நன்மையாலே
                        ஆத்துமத்தில் பூரிப்பேன்;
            தேவா, உம்தம் சமூகம்
            நல்கும் திவ்ய; வெளிச்சம்.

2.         கர்த்தரே, உம்மண்டை வந்த
                        என்னண்டைக்கு வாருமேன்;
            நீர் இறங்கும் போதனந்த
                        இன்பத்தால் மகிழுவேன்;
            ஏழை என்தன் நெஞ்சமும்
            தேவ ஸ்தலமாகிடும்.

3.         பயத்தோ டும்மண்டை சேர,
                        என் மன்றாட்டும் துதியும்
            நல்ல பலியாக ஏற
                        உமதாவியைக் கொடும்;
            தேகம், ஆவி, யாவையும்
            சுத்தமாக்கி யருளும்.

4.         நல்ல நிலத்தில் விழுந்த
                        விதை பயிராகுமே;
            அவ்வாறாக நான் மிகுந்த
                        கனிகளைத் தரவே
            வசனத்தைக் காக்க நீர்
            ஈவளிக்கக் கடவீர்.

5.         விசுவாசத்தை விடாமல்
                        அதில் பலப்படவும்
            ஒருக்காலும் தவறாமல்
                        உம்மை நான் பின் செல்லவும்
            அருட்சக்தியை நீரே
            எனக்கீயும், கர்த்தரே.

6.         நாதா, பேசும்; தாசன் கேட்பேன்;
                        நீர் இப்பாழ் நிலத்திலே
            பெய்யப் பண்ணும் மன்னா சேர்ப்பேன்
                        நல் தியானத்துடனே;
            தாரும் ஜீவ பானத்தை;
            தீரும் பசி தாகத்தை.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு