309. இராகம்: சௌராஷ்டிரம் ஆதி தாளம் (470)
பல்லவி
இங்கெமது
நடுவில் எழுந்திடுவாய்-இந்நாளில்
இறைவா, என்மேல் கருணை பொழிந்திடுவாய்,
சரணங்கள்
1. துங்கவனே, இவர்கட் கிங் கியற்றும்-நல்ல
சோபனம்[1] ஓங்க
வென்றா சீர்வதிக்க,
மங்கள கீதத்தால் மனம் மகிழ,-இங்கே
வரும் அனைவோரும் உரிமை உற் றொரு மனதாக
மருவி மறம் யாவும் மறந்திட,
வரும் நேசமதாலே சிறந்திட, - இங்
2. உற்றார் சுற்றத்தார் யாரும் உளம் களிக்க-வஞ்சம்
உறு மருவலர்[2] தாமும்
மனம் தெளிக்க
பற்றுறு நேசர் கூடிப் பதம் படிக்க-இந்தப்
பதி[3] மனையாளின்
உறவோர் நிதியுடன் வாழ்க,
பணிவாய் மனதோடு மதித்திட
பரனே, உனை யாங்கள் துதித்திட - இங்
3. பண்டு கானாவில் ஆன கல்யாணத்தில்-வந்து
பட்சம் வைத்தருள் செய்த பான்மை யதாய்
தொண்டர், எளியர் இங்கு கொண்டியற்றும்-இந்தச்
சோபன நாளில் தேவரீர் மாவணம் மேவி,
சுசியால் எமதுள்ளம் நெகிழ்ந்திட
தூய்தான நல்லாவி மகிழ்ந்திட - இங்
- ஜாண் பால்மர்
No comments:
Post a Comment