08 June 2026

இந்த இரவில் எமைக் காரும் இயேசையாவே

கீ.கை:66

66.  காகம்: சயிந்தவி.                                                                                                                 தாளம்: ஆதி.

 

                             கண்ணிகள்

 

1.       இந்த இர வில்எமைக் காரும் - இயேசையாவே நீர்

          உந்தன்திருக் கண்ணாலே பாரும்.

 

2.         சென்ற பகல் முழுதும் நீரே - எங்க ளுக்கொரு

            தீமை வராமல் காத்தீர் தேவே.

 

3.         சரீர ஆத்தும நன்மை ஐயா - எல்லாம் உம்மாலே

            தட்டின்றி பெற்றுக் கொள்வோம் மெய்யாய்.

 

4.         இரவில் நித்திரை செய்யும் போதே - காக்கும் தூதர்கள்

            இறங்கிச் சூழச் செய்யும்இப் போதே

 

5.         சுகமான நித்திரையைத் தாரும் - சாத்தான் சோதனை

            துன்பம் வராமலே தற்காரும்.

 

6.         அக்கினி மோசங்களால் சேதம் - பொல்லாங்குகள்

            அணுகாமல் காத்திடுமே பாசம்.

 

7.         மறுநாள் அதிகாலையைக் காண - கிருபை செய்யும்

            மனுவேல் உமது பாதம் பூண

 

8.         நெஞ்சம் விழித்து உம்மைக் கெஞ்சும் - சீயோன் மகளின்

            நேயாநீர் இங்கு வந்து கொஞ்சும்.

 

9.         தாசர் சபையாரின் மன்றாட்டு - ஐயா உமது

            சமுகம் வரட்டுமே தாராட்டு.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...