08 June 2026

இத்தனை பெருங்குருசை ஐயா நீர்

ஞா.கீ:108

 

108. இராகம்: எதுகுலகாம்போதி                       ஆதிதாளம் (412)

 

                             பல்லவி

 

                   இத்தனை பெருங்குருசை, ஐயா, நீர்

                        எடுத்தெப்படி நடப்பீர் துய்யா!

 

                             அனுபல்லவி

 

            இத்தரையோர் வினையறச் சத்தமற்ற ஆடதுபோல்

            இடறி தாளுந் தத்தளித்து வீழ்ந்திட

            எழுந்து பதறியே சடலம் சோர்ந்திட - இத்தனை

 

                             சரணங்கள்

 

1.         கொல்கதா பாதையினிற் கூட்டம் அடர்ந்திடவும்;

            கொடியோர் நடத்திவரவும்,

            நல்மாதரான சிலர் நாடிப் புலம்பிடவும்

            நயமதாகி தோள்கள் சிவக்கவும்

            நாதா, உமக்குப்பின் சீமோன் சுமக்கவும் - இத்தனை

 

2.         வானா சனத்திலே மாறத நன்மைகளை

            மாந்தர் அனுபவித்திட,

            ஞானாகரனே, உந்தன் நற்றாள் கரத்தினிலே

            நைய ஆணியினா லிறுக்கவும்,

            மெய்யில் பாரமாய்ச் சுமையொறுக்கவும் - இத்தனை

 

3.         ஆவியொடுங்கிடவும், அவயவம் நடுங்கிடவும்,

            அருள் முகம் வாடிடவும்,

            பாவிகளைத் தமது பாரிச[1]மாக்கிடவும்;

            பாடுபட வந்த இரக்க வாசனே

            பரமநாதனின் அருமைச் சேயனே - இத்தனை

 

 

- தேவசகாயம் ஆசாரியர்

 



[1] பக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...