மண்ணிலே பாவத்தினாலு தித்து வந்த

மண்ணிலே பாவத்தினாலு தித்து வந்த பாவி யான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

கண்ணிகள்

 

          மண்ணிலே பாவத்தினாலு தித்து வந்த பாவி யான்

            மசலையான நாள் துவக்கி வம்பிலே நடந்த நான்

            கண்ணினாலே செய்த பாவம் எண்ணினாலும் முடியுமோ

            காதோடை பொறிவினை கணக்கினை காணாகாதே

            புண்ணியம் மனத்துடைய பேருமற்ற வஞ்சகன்

            உளையனான பாவிநான் புரிந்த கண்டங்கன்நான்

            எண்ணிறந்த கோடி பாவ மும்பொறுத் தீடேற்றவும்

            ஏகனுக்குரைக்க வேணும் இயேசு நாதர் சுவாமியே

 

            பொன்னை நாடும் ஆசையும் பொருளை நாடும் ஆசையும்

            பூமி தேடும் ஆசையும் சீமை தேடும் ஆசையும்

            கன்னி மாதர் ஆசையும் காம லீலை ஆசையும்

            கற்புலங்கள் ஐந்ததின் கணக்கில்லாத ஆசையும்

            மின்னும் ஆடை ஆடு மாடு வீடு வாசல் ஆசையும்

            மிக்கத் தந்தை தாயார் ஆசை மக்கள் பந்தின் ஆசையும்

            எண்ணி எண்ணியும் ஆசையும் இகழ்ந்து யான் பிழைக்கவென்று

            ஏகனுக்குரைக்க வேணும் இயேசு நாதர் சுவாமியே

 

            வஞ்ச மிஞ்சு பஞ்ச பாவி நெஞ்சில் அன்பில்லாதவன்

            வானவன் உரைத்த பத்து மறைதனை மறுத்தவன்

            தஞ்சமென்றடைந்த பேரை தள்ளிவிட்ட பாதகன்

            தன்ம நீதி நியாயமும் தவத்தையும் மறந்தவன்

            அஞ்சேன் னென்றுனைப் பணிந்திடாத துர்குணன் என்னை

            அக்கினி க்கடப்படுத்தி ஆக்கினைவிடாமலே

            எஞ் ஜென்மாவி முற்றிலும் இறங்க வேண்டும் என்பதாய்

            ஏகனுக்குரைக்க வேணும் இயேசு நாதர் சுவாமியே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு