30 May 2019
பூமியின் நற்குடிகளே கர்த்தரை என்றும்
அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை
22. (50T) ஆனந்தமாக
ஆர்ப்பரிப்பீரே
சங்கராபரணம். 98-ம்
சங்கீதம் ஆதிதாளம்
பல்லவி
அதிசயங்களைச்
செய்யும் ஆண்டவரை
ஆனந்தமாக
ஆர்ப்பரிப்பீரே.
அனுபல்லவி
இரக்கம் கிருபை சத்தியம் விளங்க
இஸ்ரவேலரை நினைவு கூர்ந்தார். - அதி
சரணங்கள்
1. நீதியை ஜாதிகள் முன்பாக நிறுத்தி
நித்திய ரட்சிப்பைப் பிரஸ்தாபப்படுத்திப்
பூமியின் எல்லைகள் நின்புகழ் காணப்
புரிந்தனை நின் அருள் பூரணமாக; - அதி
2. பூரிகை எக்காளம் சுரமண்டலத்தால்
பூரிப்பாய்த் துதிப்பீர் ஆண்டவர் நாமம்,
கீத சத்தத்தாலே கீர்த்தனம்பண்ணிக்
கிருபாகரனைப் போற்றிடுவீரே. - அதி
3. ஆழியும் பூமியும் அதிலுள்ள யாவும்
ஆறுகள் மலைகள் அனைத்துமே பாடும்.
ஜாதிகள் யாவையும் சரிவர நடத்தி
நீதியாய் நியாயம் விசாரிக்க வருவார்.
- அதி
4. பரமபிதாவே பரிசுத்த தேவா,
பாரினில் உதித்த தேவ குமாரா,
ஆவியாய் எங்கும் நிறைந்து விளங்கும்
ஆரண திரித்துவா, துதி உமக்கே. - அதி
கர்த்தரைக் கெம்பீரமாக நாம் பாடுவோம்
உன்னதமானவர் சன்னிதி மறைவில்
வானமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும்
கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள்
விடியல் நேரத்தின் வெள்ளி முளைக்குது
அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்
பாடல் To Download Txt Lyrics file Youtube Link அவர் நாமத்தில் இயேசு நாமத்தில் ...
-
உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் மேலும் அதிக பாடல்களுக்கு உன்னதரே உம் மறைவில் தங்கி...
-
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண தாய் மறந்தாலும் நீர...
-
பாடல் மேலும் அதிக பாடல்களுக்கு நான் நடந்து வந்த பாதையிலெல்லாம் ...