அலங்கத்திற்குள்
அமைதி தோன்றும்
அரண்மனைக்குள் சுகங்கள் தோன்றும்
பார் வாழ்வில் பார்
கோணல் எல்லாம் நேராய் மாறும்
கரடும் முரடும் சமமாய் மாறும்
பார் வாழ்வில் பார்
கரம் பிடிக்கும் கர்த்தர் இயேசுவே இயேசுவே
வழி நடத்தும் வல்ல மீட்பரே
கோடி ஸ்தோத்திரம் சொல்லுவோம்
கோடி ஸ்தோத்திரம் சொல்லுவோம்
1. தேவன் நம்மேல் வைத்த அன்புக்கு
ஈடு இல்லையே
தேடுகின்ற தாசருக்கு கேடு இல்லையே
புகழுவோம் புனிதரை வாழ்த்தி வணங்குவோம்
மகிழுவோம் மகிபனை போற்றிப் பாடுவோம்
வாழ்கவே உமது
கிருபை
வாழ்கவே உமது பெருமை
வாழ்கவே உமது மகிமை
என்றென்றுமே
2. கண்மணிப்போல் நம்மை என்றும்
காத்துக் கொள்ளுவார்
மேய்ச்சல் உள்ள புல்வெளியில்
மேய்த்துச் செல்லுவார்
நன்மையும் கிருபையும் நம்மை தொடருமே
முன் செல்லும் மீட்பரால் தடைகள் தகருமே
வாழ்கவே உமது சத்தியம்
வாழ்கவே உமது நித்தியம்
வாழ்கவே உமது துத்தியம்
என்றென்றுமே
- Dr. V.C. Amuthan
No comments:
Post a Comment