08 July 2021

ஆகாப் என்னும் இராஜா ஒருவன்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆகாப் என்னும் இராஜா ஒருவன் ஆண்டு வந்தானாம்

            அவனைப் பார்க்க எலியா தீர்க்கத்தரிசி சென்றாராம் - 2

 

                        உந்தன் மீது தேவக் கோபம் என்றுரைத்தாராம்

                        மழையும் பனியும் இந்த நாட்டில் வராது என்றாராம்

 

1.         மழை பொழியும் காலம் வந்து கடந்து போயிடிச்சாம்

            மழை இல்லாமல் மிருகம் எல்லாம் மாண்டு போயிடிச்சாம் - 2

            ஆகாபுக்கு எலியா மேலே கோபம் வந்திடிச்சாம்

            எலியா தாத்தா காட்டுக்குள்ளே ஓடிப் போனாராம் - 2 - ஆகாப்

 

2.         காட்டுக்குள்ளே எலியாவுக்கு பசியும் வந்திடுச்சாம்

            கண் மயங்க கடவுளிடம் வேண்டிக் கொண்டாராம் - 2

            அழகு காகம் குரலைக் கேட்டு வெளியே வந்தாராம்

            தாத்தாவுக்கு இறைச்சி ரொட்டி தினமும் கொடுத்ததாம் - 2 - ஆகாப்

 

3.         சின்னத் தம்பி சின்னத் தங்கை கண் கலங்காதே

            எலியா தாத்தா தேவன் என்றும் நம்மிடம் உண்டே - 2

            உந்தன் வாழ்வை உள்ளங்கையில் வரைந்து உள்ளாரே

            அவரில்லாமல் முடிகள் ஒன்றும் தரையில் விழாதே - 2 - ஆகாப்

 

 

- நெல்லை சாலோமோன்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...