ஆகாப் என்னும்
இராஜா ஒருவன் ஆண்டு வந்தானாம்
அவனைப் பார்க்க எலியா தீர்க்கத்தரிசி சென்றாராம்
- 2
உந்தன்
மீது தேவக் கோபம் என்றுரைத்தாராம்
மழையும்
பனியும் இந்த நாட்டில் வராது என்றாராம்
1. மழை பொழியும் காலம் வந்து கடந்து போயிடிச்சாம்
மழை இல்லாமல் மிருகம் எல்லாம் மாண்டு போயிடிச்சாம்
- 2
ஆகாபுக்கு எலியா மேலே கோபம் வந்திடிச்சாம்
எலியா தாத்தா காட்டுக்குள்ளே ஓடிப் போனாராம்
- 2 - ஆகாப்
2. காட்டுக்குள்ளே எலியாவுக்கு பசியும் வந்திடுச்சாம்
கண் மயங்க கடவுளிடம் வேண்டிக் கொண்டாராம்
- 2
அழகு காகம் குரலைக் கேட்டு வெளியே வந்தாராம்
தாத்தாவுக்கு இறைச்சி ரொட்டி தினமும் கொடுத்ததாம்
- 2 - ஆகாப்
3. சின்னத் தம்பி சின்னத் தங்கை கண் கலங்காதே
எலியா தாத்தா தேவன் என்றும் நம்மிடம் உண்டே
- 2
உந்தன் வாழ்வை உள்ளங்கையில் வரைந்து உள்ளாரே
அவரில்லாமல் முடிகள் ஒன்றும் தரையில் விழாதே
- 2 - ஆகாப்
- நெல்லை சாலோமோன்
No comments:
Post a Comment