குருசினில் தொங்கினீர் குருதியும் சிந்தினீர்

குருசினில் தொங்கினீர் குருதியும் சிந்தினீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

பல்லவி

 

                   குருசினில் தொங்கினீர், குருதியும் சிந்தினீர்,

                        குரு இயேசு நாதா! நீர் கொல்கொதாவில்-(2)

 

சரணங்கள்

 

1.         கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்தே

            கண்கள் அயர்ந்தே, தாகத்தால் தொய்ந்தே-(2)

            ஏனோ இத்தனை பாடுகள் ஏற்றீர்? -(2)

            என் பாவம் போக்கிட வந்ததாலோ?-(2) -குருசினில்

 

2.         தலை சாய்க்க உலகில் ஸ்தலம் இல்லை என்றே

            திருவாய் மலர்ந்த தேவ குமாரா! -(2)

            சிலூவை தான் உமக்குத் தலை சாய்க்க இடமோஇ-(2)

            பலியாகி மீட்டிட வந்ததாலோ?-(2) – குருசினில்

 

3.         தேகமதிலே வாதையடைந்தே

            பாதகரின் பாவம் ஏற்றவராய் -(2)

            தேவனோடொன்னையும் சேர்த்திட ஒன்றாய்த்-(2)

            தேவாட்டுக்குட்டியாய் வந்தீரோ நீர்?-(2) -குருசினில்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு