அணைக்கும்
கரங்கள் உண்டு
ஆற்றும் நேசர் உண்டு
வேஷமான மனித உலகில்
தேற்றும் தேவன் உண்டு
1. அன்பின் பஞ்சத்தினால் அலைந்து திரிந்தேனே
மிஞ்சும் சோகத்தினால் நெஞ்சம் துடித்தேனே
அன்பர் அன்புதுன்பம் நீக்க இன்பம் கண்டேனே
2. அள்ளி அணைத்திடுவார்
அணைத்து முத்தம் செய்வார்
துள்ளி தூக்கிடுவார் தோளில் சுமந்திடுவார்
இதய
ஏக்கம் தீர்க்கும் தேவன்
இயேசு
நல்லவரே
3. ஆதி அன்புதனில்
தினமும் திளைத்திடவே
ஆவி
ஈந்தருளும் அனலை மூட்டிவிடும்
வெள்ளம்
திரண்ட தண்ணீரும்
அன்பை அணைக்க முடியாதே
4. உண்மை அன்பு என்னை
தேற்ற யாருமில்லை
சுற்றத்தாரின் அன்பு சூன்யமாகிடுதே
தவிக்கும் உள்ளம் தாகம் தீர
உம்மில்
மகிழ்ந்திடுவேன்