ஜெயமே ஜெயமே ஜெயம் ஜெயம் எப்போதும்


ஜெயமே ஜெயமே ஜெயம் ஜெயம் எப்போதும்
இயேசு ராஜாவுக்கே
நாதனின் தரிசனம் நானிலத்தில் உள்ளோருக்கு
நல்வழிக் காட்டிடும் சுத்தாங்க அங்கத்திற்கே

1.         அலசடிப்பட்டிடும்[1] மானிடர் எல்லோரும் கூடி
            வருவார் சுத்தாங்கத்திற்கே
            இராஜமாணி பொன்னையா
            அருள்நிறையுள்ள சுத்தாங்க அங்கத்திற்கே

            வா வா பாவி மலைத்து நில்லாதே வா
            சுத்தாங்க அங்கத்திற்கே
            எதற்கும் அஞ்சாமல் தேர்போன்று எதிர்த்து நிற்கும்
            வீரர்கள் நிறைந்த சுத்தாங்க அங்கத்திற்கே

2.         பத்தொன்பதாம் நூற்றுக்கு மேல் இருபத்தி நால்வருடம்
            மாசி தேதி பதி னொன்றாம் அந்நாளை எதிர்பார்த்த
            சுத்தாங்க அங்கத்திற்கே

            ஜெயமே ஜெயமே ஜெயம் ஜெயம் எப்போதும்
            பரிசுத்த அங்கத்திற்கே

- போதகர் திரு. சா. சிலுவைமணி நாடார்,
மருதகுளம், திருநெல்வேலி மாவட்டம்.


[1] துன்பப்பட்டிடும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு