19 August 2014

வந்து நல்வரம் தந்தனுப்பையா


நல்வரந் தந்தனுப்பையா

299. (13) ஆனந்தபைரவி                                ரூபகதாளம்

கண்ணிகள்

1.         வந்து நல்வரம் தந்தனுப்பையா,-ஆதிநாதா, ஜோதீ,
            வல்ல ஆவியை நல்கியாளையா.

2.         பண்ணின ஜெபம் எண்ணிக்கேள், இன்னும்-ஆதிநாதா, ஜோதீ,
            பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்.

3.         காதில் கேட்ட உன் வேத வாக்கியம்,-ஆதிநாதா, ஜோதீ,
            கருத்தில் இருத் தப்போதே பாக்கியம்.

4.         புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே-ஆதிநாதா, ஜோதீ,
            புத்தி தா நான் புதிதாய் உய்யவே.

5.         இந்தப் பலியின் இனிய கந்தமே,-ஆதிநாதா, ஜோதீ,
            என்னில் கமழ ஈவாய் அந்தமே.
- ச. அருமைநாயகம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...