அரசனைக் காணமலிருப்போமோ


அரசனைக் காணாமலிருப்போமோ?

36.     மாஞ்சி                                   ஆதிதாளம்

பல்லவி
                        அரசனைக் காணமலிருப்போமோ?-நமது
                        ஆயுளை வீணாகக் கழிப்போமோ?-அரசனை

அனுபல்லவி
             பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ?-யூதர்
            பாடனு பவங்களை ஒழிப்போமோ?-யூத - அரசனைக்

சரணங்கள்
 1.         யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே,-இஸ்ரேல்
            ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
            ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
            தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே!-யூத - அரசனைக்

2.         தேசோ மயத்தாரகை[1] தோன்றுது பார்!-மேற்குத்
            திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
            பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே-அவர்
            பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே!-யூத - அரசனைக்

3.         அலங்காரமனை யொன்று தோணுது பார்!-அதன்
            அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
            இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்!-நாம்
            எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்!-யூத - அரசனைக்

4.         அரமனையில் அவரைக் காணோமே!-அதை
            அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
            மறைந்த உடு[2] அதோ! பார் திரும்பினதே,-பெத்லேம்
            வாசலில் நமைக்கொண்டு சேர்க்குது பார்!-யூத - அரசனைக்

5.         பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே,-ராயர்
            பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
            வன்கண்ணன் ஏரோதைப் பாராமல்,-தேவ
            வாக்கினால் திரும்பினோம் சோராமல்,-யூத - அரசனை
- ஜி.சே. வேதநாயகம்


[1]. நட்சத்திரம்
[2]. நட்சத்திரம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு