ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரின்
சந்நிதியில்
ஆனந்தமாய்
கூடிடுவோம்
நாம்
அல்லேலூயா பாடிடுவோம்
நாமே
இயேசு ஆலயமாம்
அவர்
நாடும் நல்ல இருப்பிடமாம் - 2
பாடிப்
போற்றிடுவோம் தூயவனைத் துதித்திடுவோம் - ஆவியோடும்
1. துன்பமென்ன துயரமென்ன
தூய தேவன்
இருக்கையிலே
கஷ்டம் என்ன கவலை என்ன
கர்த்தர்
நம்மோடு இருக்கையிலே
தூய மனதுடனே
அவரைத் துதிக்கும் வேளையிலே
இதய கவலையெல்லாம்
நம் இயேசு அகற்றிடுவார்
பக்தியுடன்
பாடிடுவோம் பரிசுத்தரைப் போற்றிடுவோம் - ஆவியோடும்
2. வாழ்வு
வரும் வளமும் வரும்
வல்ல இயேசுவைத்
துதிக்கையிலே
பாவ சாபம்
தொலைந்துவிடும்
பாடிப்
போற்றி ஜெபிக்கையிலே
கண்ணின்
மணிபோல - இயேசு
கருத்தாய்
காத்திடுவார்
விண்ணின்
வாழ்வினிலே - நம்மை
வெற்றியுடன்
வாழ வைப்பார்
வாயாற வாழ்த்திடுவோம் வாஞ்சையுடன் துதித்திடுவோம்
- ஆவியோடும்
- Seerkazhi Yesuprakasam
No comments:
Post a Comment