அல்லேலூயா தேவனை அவருடைய

கீதங்களும் கீர்த்தனைகளும் : 36

சங்கீதம் : 150

1. அல்லேலூயா தேவனை அவருடைய
    பரிசுத்த ஆலயத்தில் அவரைத் துதியுங்கள்
    என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)
    வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்து
    வல்லமை நிறைந்த கிரியைக்காக
    அல்லேலூயா (4 முறை)

2.  மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்
    எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்
    என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)
    வீனை சுரமண்டலம் தம்புரு நடத்தோடும்
    யாழோடும், குழலோடும், தாளங்களோடும்
    அல்லேலூயா (4 முறை)

3. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்
    இங்கித சங்கீதத்தோடும் அவரைத் துதியுங்கள்
    என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)
    சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள்
    சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள்
    அல்லேலூயா (4 முறை)  

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு