19 February 2020

வா இயேசு அண்டை வா


                        வா இயேசு அண்டை வா தா இதயத்தை தா
                        மனந்திரும்பி மன்னவன் இயேசுவையே
                        இரட்சகராய் ஏற்றிடவா

1.         மரம் தான் பூக்களை சுமக்கின்றதே
            மரத்தை ஒரு பூ சுமந்ததே
            சிலுவை மரத்தை சாரோனின் ரோஜா
            சுமந்து நமக்காய் பலியானாரே

2.         வஸ்திரத்தை எடுத்துக் கொள்ள
            வேண்டும் என்பவனுக்கு
            உன் அங்கியையும் விட்டுவிடு என்றாரே
            லேகியோனுக்கு தன்
            வஸ்திரத்தைக் கொடுத்தாரே
            அங்கியை சீட்டு போட கொடுத்தாரே

3.         ஒரு கன்னம் அறைந்தால்
            மறு கன்னம் காட்ட சொன்ன இயேசு
            முன்மாதிரி ஆனாரே
            ஆணியால் ஒரு கை அறைந்தவுடனே
            மறு கையை ஆணிக்கு நீட்டினாரே


No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...