19 August 2014

வந்து நல்வரம் தந்தனுப்பையா


நல்வரந் தந்தனுப்பையா

299. (13) ஆனந்தபைரவி                                ரூபகதாளம்

கண்ணிகள்

1.         வந்து நல்வரம் தந்தனுப்பையா,-ஆதிநாதா, ஜோதீ,
            வல்ல ஆவியை நல்கியாளையா.

2.         பண்ணின ஜெபம் எண்ணிக்கேள், இன்னும்-ஆதிநாதா, ஜோதீ,
            பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்.

3.         காதில் கேட்ட உன் வேத வாக்கியம்,-ஆதிநாதா, ஜோதீ,
            கருத்தில் இருத் தப்போதே பாக்கியம்.

4.         புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே-ஆதிநாதா, ஜோதீ,
            புத்தி தா நான் புதிதாய் உய்யவே.

5.         இந்தப் பலியின் இனிய கந்தமே,-ஆதிநாதா, ஜோதீ,
            என்னில் கமழ ஈவாய் அந்தமே.
- ச. அருமைநாயகம்

அனுக்ரக வார்த்தையோடே

ஞா.கீ:499

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

499. இராகம்: சங்கராபரணம்                            ஆதி தாளம்

 

1.       அனுக்ரக வார்த்தையோடே-இப்போ-து

            அடியாரை அனுப்புமையா!

            மனமதில் தயவுறும் மகத்துவபரனே!

            வந்தனம் உமக்காமென்.

 

2.         நின்திரு நாமமதில்-கேட்ட

            நிர்மலமாம் மொழிகள்

            சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்

            சாமி நின்னருள் புரிவாய்.

 

3.         தோத்திரம், புகழ், மகிமை,-கீர்த்தி,

            துதிகனம், தினமுமக்கே

            பாத்திரமே; அதிசோபித பரனே!

            பாதசரண் ஆமென்!

 

 

- ச.ஜே. சிங்

 

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...