14 January 2015

கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும் ஓர் அற்புதம்

            கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும் ஓர் அற்புதம்
            வானிலே அதன் தேர் வலம் நடந்த அழகு அற்புதம்!

1. தூதர்கள் கூட்டம் கீத பவனியாய்
   தூது சொன்னது அற்புதம் அற்புதம்
   பாமரர், மேய்ப்பர், தேடியே வந்ததும் அற்புதம் அற்புதமே
   மேதையர் சிலராய்ப் பணிந்திடச் சென்றதும் அற்புதம் அற்புதமே

2. கன்னியின் வயிற்றில் உன்னதர் ஆவியால்
   மன்னன் வரவு அற்புதம்
   அகிலம் முழுவதும் தேவன் படைத்தது அற்புதம் அற்புதமே
   உலகினில் தம்மை வெளிப்படச் செய்ததும் அற்புதம் அற்புதமே

3. பாவ நிவாரணம் கிடைத்திடும் வழிதனை
   தேவன் அமைத்தது அற்புதம் அற்புதம்
   சிலுவையில் தம்முயிர் தானமாய்ப் படைத்ததும் அற்புதம் அற்புதமே
   விடுதலை பெறும்வழி துவக்கியே வைத்ததும் அற்புதம் அற்புதமே

4. இயேசுவின் சன்னிதி அடைக்கலம் தேடுவோர்
   வாழ்வு மலர்ந்திடும் அற்புதம் அற்புதம்
   மீண்டும் பிறந்தவர் கூடியோ வாழ்ந்திடும் அற்புதம் அற்புதமே
   அழகிய மானுடம் உலகெங்கும் விடியும் அற்புதம் அற்புதமே


அரசனைக் காணமலிருப்போமோ

கி.கீ:36

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                             அரசனைக் காணாமலிருப்போமோ?

 

36.     மாஞ்சி                                                                   ஆதிதாளம்

 

                             பல்லவி

                   அரசனைக் காணமலிருப்போமோ?-நமது

                        ஆயுளை வீணாகக் கழிப்போமோ?-அரசனை

 

                             அனுபல்லவி

 

            பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ?-யூதர்

            பாடனு பவங்களை ஒழிப்போமோ?-யூத - அரசனைக்

 

                             சரணங்கள்

 

1.         யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே,-இஸ்ரேல்

            ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே[1],

            ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்

            தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே!-யூத - அரசனைக்

 

2.         தேசோ மயத் தாரகை[2] தோன்றுது பார்!-மேற்குத்

            திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!

            பூசனைக்[3] காண நன்கொடைகள் கொண்டே-அவர்

            பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே!-யூத - அரசனைக்

 

3.         அலங்காரமனை யொன்று தோணுது பார்!-அதன்

            அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!

            இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்!-நாம்

            எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்!-யூத - அரசனைக்

 

4.         அரமனையில் அவரைக் காணோமே!-அதை

            அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!

            மறைந்த உடு[4] அதோ! பார் திரும்பினதே,-பெத்லேம்

            வாசலில் நமைக்கொண்டு சேர்க்குது பார்!-யூத - அரசனைக்

 

5.         பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே,-ராயர்

            பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!

            வன்கண்ணன் ஏரோதைப் பாராமல்,-தேவ

            வாக்கினால் திரும்பினோம் சோராமல்,-யூத - அரசனை

 

 

- அருள்திரு. ஜி.சே. வேதநாயகம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு



[1] மிகுதல்

[2]. நட்சத்திரம்

[3] இறைவன்

அதிகாலையில் பாலனை தேடி

கீ.கை:9

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

9.

 

          அதிகாலையில் பாலனை தேடி

            செல்வோம் நாம் யாவரும் கூடி

            அந்த மாடடையும் குடில் நாடி

            தேவ பாலனை பணிந்திட வாரீர்

 

                        வாரீர் வாரீர் வாரீர்

                        நாம் செல்வோம்

 

1.         அன்னை மரியின் மடிமேலே

            மன்னன் மகவாகவே தோன்ற

            விண் தூதர்கள் பாடல்கள் பாட

            விரைவாக நாம் செல்வோம் கேட்க                   - அதி

 

2.         மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே

            அந்த மன்னவன் முன்னிலை நின்றே

            தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்

            நல்ல காட்சியை கண்டிட வாரீர்                       - அதி

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...